November 30, 2005

Firefox-ல் தமிழ்

ரொம்ப நாளாவே Firefox (நெருப்புநரி?) தமிழ் font-ங்கல ஒயுங்கா காட்டாம ஆட்டங்காட்டுச்சுங்க. இம்புட்டு நாளுக்கப்புறம் அத்த சரி ஒருவழியா கட்டிகீராங்க. இத்த செஞ்சா சரியா பூட்துங்க. இப்ப தினமலர், விகடன், குமுதம்... எல்லாம் சோக்கா Firefox-ல தெர்துங்க. உங்களுக்கும் வேணுமுனா இன்ஸ்டால் பண்ணி பாருங்க. தமில வளத்து உடுங்க... வாள்க டமில்...

பி.கு: கடைசியாக கிடைத்த தகவலின்படி இந்த நற்காரியத்தை பயர்பாக்ஸ் தமிழ் உலகிற்கு அளித்தவர் சரவணன். நன்றி சரவணன். உங்கள் தமிழ் பணி தொடர எனது வாழ்த்துக்கள்.

Categories:

November 29, 2005

சின்னத்துரையும் முத்துசாமியும்

மற்றுமொரு தமாசு வீடியோ + கருத்து.
என்சாய்....




Categories: ,

November 18, 2005

சிவாஜி பன்ச் - இது எப்டி இருக்கு?

சிவாஜி படத்தில் இந்த பன்ச் டயலாக்குகள் உள்ளன என எனக்கு ஒரு மின்னஞ்சல் வந்தது (அப்கோர்ஸ் புரளி தான்). தலைவர் சொல்ற மாதிரி கண்ணை மூடி கற்பனை செய்துபார்த்ததில் உடம்பெல்லாம் புல்லரித்து போய்விட்டது. நீங்களும் படித்து புல்லரித்து கிடவாக.

தலைவர்: சிங்கத்தை கொஞ்ச முடியாது, சிவாஜியை மிஞ்ச முடியாது!

தலைவர்: அமைதிக்கு பாபாஜி, அடிதடிக்கு சிவாஜி.

தலைவர்: பாம்பை பார்த்தா படையே நடுங்கும்,
இந்த சிவாஜியை பார்த்தா பாம்பே நடுங்கும்!

தலைவர்: தண்ணீரை கிள்ள முடியுமா?
சிவாஜியை வெல்ல முடியுமா?

தலைவர்: போன் அடிச்சா ரிங்கு, இந்த சிவாஜி அடிச்சா சங்கு!

தலைவர்: கண்ணா...! ஆளு ரவுண்டா இருந்தா பத்தாது.
ஆட்டதுல ஆல்ரவுண்டரா இருக்கனும்...



உங்களுக்கு இது போல இன்னும் எதாவது தோனுச்சினா பின்னூட்டத்தில்(கமென்ட்) இடவும்.




Categories:

November 11, 2005

கில்லி + டைடானிக்



நம்ம மக்கள் யாரோ டைடானிக் படத்தோட வீடியோக்கு கில்லி படத்தோட டையலாக்கை கலந்து ரவுசு காட்டியிருக்காங்க. வீடியோவை பார்த்து வயிறு வலிக்க சிரிச்சேன். அந்த வீடியோவை உங்கள் பார்வைக்காக கீழே இணைச்சிருக்கேன். இதை உருவாக்கியவருக்கு (யாருனு எனக்கு தெரியலை) எனது நன்றி.


Warning: இதை பார்த்து, அதனால் உங்கள் வயிறு புண்ணானால் அதற்கு நான் பொறுப்பல்ல.


















Launch in external player


*இந்த வீடியோவை அனுப்பிய பாலஜிக்கு நன்றி



Categories: , ,

November 10, 2005

கருத்து கருத்துப்போச்சு

பத்திரிக்கையின் கருத்துக்கணிப்புக்கு கருத்து தெரிவித்த குஷ்புவின் கருத்துக்கு அதரவை தனது கருத்தின் மூலம் தெரிவித்த சுஹாசினியின் கருத்தைப் பற்றி எனது கருத்தை உங்கள் மீது நான் திணிக்க,
நீங்கள் உங்கள் அதரவு/எதிர்ப்பை கருத்தாய் தெரிவிக்க,
தமிழ் பாதுகாப்பு (ஆப்பு என படிக்கவும்) இயக்கம் களத்தில் குதிக்க,
எதிர்ப்பு போஸ்டர் அடிக்க,
இந்த கூத்தை பார்த்து ஊரே சிரியாய் சிரிக்க,
இதனால் பைத்தியமாகி பலர் சுவரைப் பார்த்து வெறிக்க,
க்க க்க க்க...

வேணாமடா சாமி இந்த பொழைப்பு. ஏற்கனவே நான் கண்ட திகில் கனவு ஒன்று போதும்.
அடங்கொக்கமக்கா! கடைசியில 'கருத்து' என்ற சொல்லே கருத்துப் போச்சே.

Categories: ,

November 07, 2005

அய்யா எஸ்.ஜே. சூர்யா

சற்று நேரம் முன் "Before Sunrise" என்ற ஆங்கில படத்தை பார்த்தேன். படம் முழுதும் இரண்டே கதாபாத்திரங்கள் - நாயகன் & நாயகி (வேர யாருப்பா??). ரயிலில் ஆரம்பித்து ரயிலில் முடிகிறது கதை. ஒரு பிரெஞ்சுகாரியும் ஒரு அமேரிக்கனும் புடாபெஸ்ட், வியென்னாவில் ரயிலில் சந்தித்துக் கொள்கிறார்கள். ஒரே ஒரு நாள் ஒன்றாக சுற்றித் திரிகிறார்கள். இது தாங்க கதை. என்னடா இவன் எஸ்.ஜே. சூர்யா மாதிரி கதை சொல்றான்னு பாக்கறீங்களா? அட அதுக்காக இந்த தலைப்பை வைக்கலை. நம்ம 'வாலி' படத்துல சோதிகா (ஜோதிகா) பொண்னு போன்ல பேசறாப்புல அஜீத்து கிட்ட லவ்வ சொல்லுமில்ல, அது இந்த படத்துல இருந்து சுட்டத்துங்க. அந்த(வாலி) படத்துல நல்லா இருந்த ஒரே சீன் இதுதான். அப்பவே நெனச்சேன் இது எங்கியோ சுட்டதுனு. இப்பதான் குட்டு வெளிபட்டு இருக்கு.

சான்சு கிடைச்சா இந்த படத்தை பார்த்துடுங்க. ரெண்டே பேருதான் படம் முழுக்க வந்தாலும் படம் போர் அடிக்காம போகும். படத்துல பல சித்தாந்தங்களை அளசுராங்க. சாம்பிளுக்கு ஒன்னு இதோ - "இறைவன் என்பவன் உனக்குள்ளோ, என்க்குள்ளோ இல்லை; உனக்கும் எனக்கும் உள்ள இடைவெளியில் தான் இருக்கிறான்..."

Categories: ,

November 02, 2005

தீபாவளி ஸ்பெஷல் -- கூத்து

ஊருலருந்து இமாந் தூரம் தள்ளி குந்திகினுகீரதால, நமக்கு டப்பாசு-less தீபாவளி தான். அதனால factory outlet-லருந்து சீப்பா புட்ச்சாந்த சொக்காய போட்டுகினு பிளாஸ்டிக் கவரை ஊதி "டபால்"னு தட்டி வெடிச்சுபுட்டு relianceindiacall வச்சி ஊட்டாண்ட கால் பண்ணா ஒன்னிமே கேக்கலை, ஒரே டப்பாசு வெடிக்கற சத்தம். ஒரு மாறி பேசி முட்சிபுட்டு, அட்த தெருவாண்ட கீற தேசி ஓட்டலுக்குள்ள பூந்து ஒரு வெட்டு வெட்டிபுட்டு வூட்டுக்கு வந்து கட்டில்ல சாஞ்சேன். அம்புட்டுத்தேன் நம்ம தீபாவளி. போன வருஷம், அலபாமா தமிழ் சங்கத்தோட தீபாவளி விழாவுக்கு போயி ஏஞ்சோட்டு பயலுவளோட சேந்து கட்டுண "F1-கலாட்டா"-ன்ற கூத்து (அத்தாங்க நாடகம்) தேன் மனசுல வந்து நின்னுச்சு. சரினு கொஞ்ச நேரம் அத்தோட ரிக்கார்டிங்கை போட்டு பார்த்தேன்.

நம்ம தமிழ் மன்மதக்குஞ்சு பசங்க யு.எஸ்-கு படிக்க வந்து என்னா என்னா ரவுசு உடுறாங்கன்ற்தை ஒரு நாடகமா போட்டோம். செம ஹிட் ஆயிடுச்சி. சரி நாம மேடையேத்துன கண்றாவிய நம்ம தமிழ் வலை மக்களும் கண்டு கஷ்ட படட்டுமேனு அத்த கூகில் வீடியோஸ்ல அப்லோட் பண்ணிகீறேன். எல்லோரும் கண்டு குஜாலாகுங்கப்பா(???)... கடி தாங்கலைனா அதை பின்னூட்டத்தில் வெடியா போட்டு தாக்குங்கப்பா.

இனிய தீபாவளி நல்வாழ்துக்கள்.

October 13, 2005

நெஞ்சில் நிறைந்த ஆலையம்


சில நாட்களுக்கு முன் நண்பருடன் அருகில் உள்ள ஹான்ஸ்வில்(Hanceville, Alabama) என்ற இடத்திற்கு சென்றிருந்தேன். அங்கே உள்ள கிருஸ்த்தவ ஆலையத்திற்கு சென்றிருந்தோம். அந்த ஆலையம் "Shrine of most blessed sacrament" என்ற பெயரால் அழைக்கப்படுகிறது. அங்கே எடுத்த புகைப்படம் தான் மேலே உள்ளது.
அங்கே இருந்த ஒருமணி நேரமும் மனதில் ஒரு இனம்புரியாத பரவச உணர்வு உண்டானது. இதே போன்ற உணர்வை சபரிமலை சாஸ்த்தாவின் சன்னதியில் உணர்ந்திருக்கிறேன். இதனால் மக்களுக்கு இந்த ஆள்தோட்டபூபதி சொல்லிகறது என்னன்னா, மனிதனுக்கு மேலே உள்ள சக்தியானது மனிதன் உருவாக்கிய மதம் என்ற மாயைக்கும் அப்பாற்பட்டது!

October 11, 2005

ஒரு காலை இளவெய்யில் நேரம்

ஒரு காலை இளவெய்யில் நேரம், அழகான இலையுதிர்காலம். தூக்கம் கலைந்து எழுந்தால் நண்பர்கள் அனைவரும் கராத்தே கிளாஸ்க்கு கிளம்பிக் கொண்டிருந்தனர். அடித்துப் பிடித்து ஒருவழியாக நானும் கிளம்பி mazda miata mx5 -ஐ விரட்டு விரட்டென விரட்டி கிளாஸ் நடக்கும் மைதானத்தை அடைந்தேன். அன்றைய வகுப்பு, countings கற்றுக்கொள்வது ( ஜப்பான், சீனா, தாய்வானீஸ் போன்ற மொழிகளில் countings கற்றுத்தருவது கராத்தே கலையில் ஒரு பகுதி).

வரிசையில் நின்று கொண்டிருந்த நான், அருகில் எங்காவது எதாவது தெரிந்த முகம் தென்படுகிறதா என நோட்டம் விட்டேன். சற்று தொலைவில் ஒரு முரட்டு ஆசாமி நின்று கொண்டிருந்தான். எங்கோ பார்த்தது போல் இருந்த அவன் யாரென யோசித்தவாரே அவனை உற்று பார்த்துக் கொண்டு இருந்தேன். அட இவன் தானே Enter the dragon படத்தில் ப்ரூஸ் லீ-யுடன் மோதும் வில்லன்களிள் ஒருவன்(பார்க்க படம்) என்று நினைத்துக் கொண்டிருக்கும் போதே அவன் என்னை பார்த்து விட்டான். அவன் முறைத்த முறைப்பில் பயந்த நான், "ஏன்டா காசு கொடுத்து வந்து அடி வாங்க வேண்டும்?" என்று கிளாஸுக்கு சேர்ந்த என் முடிவை நொந்துக் கொண்டு, "எவன் கையிலே அடி வாங்கினா சங்குதான்!" என முடிவுகட்டி, மாஸ்டரிடம் தலை சுத்துது என பொய் சொல்லிவிட்டு கிளாஸிலிருந்து ஜூட் விட்டேன்.

வீட்டுக்கு வந்ததும் bloglines.com சென்று பிற வலைபதிவுகளை மேய்ந்து பின்னூட்டம் இட்டு விட்டு பசிக்கு எதாவது சாப்பிடலாம் என fridge-ஐ திறந்தேன். அப்போது தான் அந்த சத்தம் கேட்டது. 30-40 பேர் கூடி கோஷங்கள் போடுவது போன்ற சத்தம். அமெரிக்காவில் கோஷமா என வாசலைத் திறந்து பார்த்தால், கூட்டமே என் வீட்டு முன்னால் தான் நின்று கொண்டிருந்தது. சேலை கட்டிய பெண்கள் கையில் துடைப்பம், செருப்பு, சப்பாத்தி கட்டை, அறிவாள் போன்ற தமிழ் ஆயுதங்களுடன் அனல் கக்கும் உஷ்ணப்பார்வை வீசினர். ஆகா! இவுங்களை எங்கியோ பாத்த மாரி இருக்குதே என நினைத்த போது தான் நினைவு வந்தது இவர்கள் தமிழ் பாதுகாப்பு (ஆப்பு இல்லை காப்பு) சங்கம் என்று.

இவங்க எதுக்கு நம்ம வீடு முன்னாடி போராட்டம் பண்றாங்க என்று யோசிக்கும் போதே மொத்தக் கூட்டமும் கோஷம் போடத் துவங்கியது.
"தமிலை கொள்ளாதே!"
"Blog எலுதுவதை நிருத்து"
என கோஷங்கள் வர ஆரம்பித்தது...... இதற்கும் மேல் இதை தொடர அனுமதிக்கக் கூடாதென கனவை களைத்து தூக்கத்தை விடுத்து எழுந்தேன். நாலு பதிவு போட்ட எனக்கே இந்த கனவு என்றால், மற்றவர்களின் நிலை என்ன என்று வியந்து கொண்டே மெரினா ரடியோவை ஆன் செய்து இனிய பாடலை தவழ விட்டேன். "ஒரு மாலை இளவெய்யில் நேரம், அழகான இலையுதிர்காலம்" என சூர்யா கஜினியாக லவ்விக் கொண்டிருந்தார்... சட்டென குளித்து முடித்து கனவில் கண்ட mazda mx5-ஐ நினைத்துக் கொண்டே யுனிவெர்சிட்டியை நோக்கி நடையை கட்டினேன்...

September 28, 2005

Router-க்கும் Router-க்கும் கல்யாணம்

முதலில் ஒரு b Router வாங்கி, அது பத்தாமல் போய், பிறகு ஒரு g Router வாங்கிய திறமைசாலிகளில் நானும் ஒருவன். இப்பொழுது புதிதாய் புகுந்த வீட்டில் Router-ஐ எங்கு வைத்தாலும் எதாவது ஒரு இடத்தில் சிக்னல் மட்டமாய் இருந்தது.

காலையில் பல் துளக்குவதில் இருந்து இரவு தூங்கும் வரை சிம்ரன், ரம்பா, ஜோதிகா, த்ரிஷா, நமிதா, நயன்தாரா, அசின் போன்ற தமிழ் மங்கயரின் (இதுக்கு அப்புறம் வருவோம்) பாடல்களை காணும் என் போன்ற மக்களுக்கு இது கொஞ்சம் கஷ்ட்டம் தான்.

எனவே, எனது roomate (இவர் பிற்காலத்தில் பெரிய விஞ்ஞானி ஆவார் என நினைக்கிறேன்) கொடுத்த யோசனைப்படி, இரண்டு Router-களையும் இணைத்து சிக்னல் பலத்தை வீடு முழுவதும் விஸ்த்தரிப்பு செய்ய முடிவு செய்தோம். ஆனால் எவ்வளவோ முயற்சி செய்தும், எப்படி செய்வதென தெரியவில்லை.

Masters-ல் படித்த computer networks course-ஐ உபயோகித்தால் வேலைக்காகது என முடிவு செய்து, ஆபத்பாந்தவன், அனாத ரட்சகனான கூகிளை சரண் அடைந்தோம். "உலகினில் ஒன்று உன்டெனில் அது கூகிலிலும் உண்டு" என்ற திருளொள்ளுவரின் (நான் தானுங்கோவ்) புதுமொழிக்கேற்ப, வலைசரஸ்வதியும் (அட கூகில் தாங்க) விடையை சட்டென அளித்தாள். என்னை போல் தவிப்பவர்களுக்காக அதை இங்கே ஒட்டுகிறேன் (paste செய்கிறேன்).

Connecting two SOHO broadband routers together.

Configure the IP address of the secondary router to be in the same subnet as the primary router, but out of the range of the DHCP server in the primary router. For instance DHCP server addresses 192.168.0.2 through 192.168.0.100, I'd assign the secondary router 192.168.0.254 as it's IP address.

Disable the DHCP server in the secondary router.

Setup the wireless section just the way you would if it was the primary router.

Connect from the primary router's LAN port to one of the LAN ports on the secondary router. If there is no uplink port and neither of the routers have auto-sensing ports, use a cross-over cable. Leave the WAN port unconnected!


மேலே தமிழ் மங்கயர் என குறிப்பிட்டதன் காரணம், தற்பொழுது தமிழ் திரைவுலகில் நடக்கும் கூத்துகளே (தங்கர்பச்சன் - குஷ்பூ லடாய்).

September 27, 2005

இருக்குது...இல்லை...இருக்குது

நண்பர் ஒருவர் அ(ன்பே)(ருயிரே) [B.F.] சூர்யா போல் "இருந்தது, ஆனா இப்ப இல்லை" என்று பாவமாக புலம்பிக்கொண்டு இருந்தார். "இவன் எப்பவும் இப்படி தான் புலம்புவான்" என்று விட்டுத்தல்லவும் முடியவில்லை. ஏன்னா, பார்ட்டி நாம காது கொடுத்து கேட்கிற வரை அழுது புலம்புவதை நிறுத்தாது. எனவே, "என்னப்பா விஷயம்?" என்று கேட்டேன். பார்ட்டி, இரவு தூங்கும் முன் ஒரு வலைபதிவை (blog) தொகுத்திருக்கிறார் (compose). ஆனால் அதை upload செய்யும் முன் கட்டையை சாய்த்திருக்கிறார் (அட முட்டாப்பயலே!).

விடிந்து எழுந்தவுடன் upload button-னை click செய்தால், இரவு எழுதிய அனைத்தும் தொலைந்து பொயிருக்கிறது. என்ன செய்தும் மீட்க முடியவில்லை. தனது பொன்னான சிந்தனை (???) தொலைந்த துக்கத்தில் Blogger-ஐ திட்டித் தீர்த்தார். "அட விட்டுத்தள்ளுப்பா!" என்று கூறியும் விடாமல் ஏதோ blogger Premium account வாங்கியவர் போல் விடாமல் கூச்சல் போட்டு ஒருவழியாக ஒய்ந்தார்.

இதற்கு விடை தான் என்ன என்று வலையில் துழாவியபோது இரண்டு விஷயங்கள் தெரிந்தது.

1) MS word-ல் பதிவை டைப் செய்து விட்டு, blogger-ல் upload செய்ய blogger for word என்ற tool உள்ளது என்பது ஒன்று.

2) சமீபத்தில், blog edit window-ல் "recover post" என்ற விஷயம் சேர்க்கப் பட்டுள்ளது.


இதையும் தாண்டி ஒருவரது வலைபதிவு தொல்லைந்து போனால் " கடவுள், நேயர்களை காத்துவிட்டார்" என்று தான் நினைத்துக் கொள்ள வேண்டியது தான்.

கோலிவுட்னா சும்மாவா?

கஜினி படத்தின் கதை Memento என்ற ஆங்கில படத்தின் அப்பட்ட தழுவல் என்பது பழைய செய்தி. புதிய செய்தி என்னவென்றால், புதுப்பேட்டை படத்தின் கதை சிட்டி ஆப் காட்ஸ் என்ற Brazilian படத்தின் தழுவல் என்பது தான். பொருத்திருந்து பார்ப்போம்.

ஒரு ஆறுதல் தரும் விஷயம் என்னவென்றால், நமது கோடம்பாக்கத்து மக்கள் தொடர்ந்து தெலுங்கு படங்களின் கதையை உருவுவதை விட்டு Hollywood படங்களின் கதையை உருவுகிறார்கள், ஒரு மாறுதலுக்காக!

September 26, 2005

peek out of window

This is the enhanced(photoshop) version of the snap that was shot through the window of my room. Looks like the blue color from the shy has dripped through the tree, creating the clouds.

"வானில் இருந்து நீலம் வழிந்ததால் தான் வெண்மேகம் பிறந்ததோ?"

பி.கு: இதற்கு முந்தய template மிகவும் அதிக அளவில் கிராபிக்ஸ் (Graphics) உபயோகித்ததால் சிலர் Loading problems இருப்பதாக தெரிவித்ததால் இந்த புதிய template பிறந்த்துள்ளது.

September 22, 2005

எங்கே செல்லும் இந்த பாதை

yet another snap of the Walnut street bridge in Chattanooga.

A walk worth it

A blog (infact photoblog) after a very long time. Photoblogs become very rare when u start to stop getting new batteries for your instrument(thats what I call my Vivitar 3610).

This is the picture of Walnut street bridge in Chattanooga, Tennesse. This is the world's longest pedestrian bridge. Erected in 1890, the Walnut Street Bridge was the first to connect Chattanooga's downtown with the North Shore. Structural modifications have been made to turn the bridge into what is now a pedestrian walkway. The 1/2-mile span is the longest pedestrian bridge in the world and very popular among local residents. It Provides spectacular views of Coolidge Park, the Tennessee Aquarium and the Riverfront.

July 25, 2005

சின்ன சின்ன மழைத்துளிகள்

அலபாமா வெய்யில் தாளாமல் மழைக்கு ஏங்கிய போது வைரமுத்துவின் வைர வரிகள் மழைவென பொழிய கற்பனையில் குளிர்ந்தேன்.

இடம்: அலபாமா
படம்: என்சுவாசக்காற்றே
பாடல்: சின்ன சின்ன மழைத்துளிகள்
இசை: ரகுமான்
பாடலாசிரியர்: வைரமுத்து

க்ளங்க்ளங் க்ளங்க்ளங்
ஒரு துளி விழுது ஒரு துளி விழுது
க்ளங்க்ளங் க்ளங்க்ளங்
ஒரு துளி விழுது ஒரு துளி விழுது
ஒரு துளி இரு துளி
சில துளி பல துளி
படபட தடதட சடசடவென சிதருது


சின்ன சின்ன மழைத்துளிகள் சேர்த்து வைப்பேனோ
மின்னல் ஒளியில் நூலெடுத்து கோர்த்து வைப்பேனோ
சின்ன சின்ன மழைத்துளிகள் சேர்த்து வைப்பேனோ
மின்னல் ஒளியில் நூலெடுத்து கோர்த்து வைப்பேனோ
சக்கரவாகமோ மழையை அருந்துமாம் - நான்
சக்கரவாகப் பறவையாவேனோ!
மழையின் தாரைகள் வைர விழுதுகள்
விழுது பிடித்து விண்ணில் சேர்வேனோ

(சின்ன சின்ன)

சிறு பூவினிலே விழுந்தால் ஒரு தேன்துளியாய் வருவாய்
சிறு சிப்பியிலே விழுந்தால் ஒரு முத்தெனெவே முதிர்வாய்
பயிர் வேரினிலே விழுந்தால் நவதானியமாய் விளைவாய்
என் கண்விழிக்குள் விழுந்ததனால் கவிதையாக மலர்ந்தாய்
அந்த இயற்கையன்னை படைத்த ஒரு பெரிய ஷவரிது
அட இந்த வயது கழிந்தால் பிறகெங்கு நனைவது
இவள் கன்னியென்பதை இந்த மழை கண்டறிந்து சொல்லியது

(சக்கரவாகமோ)

மழை கவிதை கொண்டு வருது யாரும் கதவடைக்க வேண்டாம்
ஒரு கருப்பு கொடி காட்டி யாரும் குடை பிடிக்க வேண்டாம்
இது தேவதையின் பரிசு யாரும் திரும்பிக் கொள்ள வேண்டாம்
நெடுஞ்சாலையிலே நனைய ஒருவர் சம்மதமும் வேண்டாம்
அந்த மேகம் சுரந்த பாலில் ஏன் நனைய மறுக்கிறாய்
நீ வாழவந்த வாழ்வில் ஒரு பகுதி இழக்கிறாய்
நீ கண்கள் மூடி கரையும்போது மண்ணில் எய்துவாய்

(சக்கரவாகமோ)

(சின்ன சின்ன)

July 24, 2005

கற்றதும் பெற்றதும் - இந்த வார உலகம்


கற்றது: சில சமயங்களில் சும்மா இருப்பதே மேல் (வாய வுட்டு மட்டிக்காதே)

பார்த்தது: "The Island" என்னும் புதிய திரைப்படம். 21ஆம் நூற்றாண்டின் முடிவில் மொத்த உலகமும் அழிந்துவிட, எஞ்சியவர்கள் ஓரிடத்தில் காக்கப்படுகிறார்கள். அவர்களுள் இருக்கும் நாயகனும் நாயகியும் எதோச்சயாக சில விஷயங்களை கிளர, அதன் பின் நடக்கும் திடுக்கிடும் சம்பவங்களே கதை. கிராபிக்ஸ் மிகவும் பிரமாதம். ஒரு முறை காணலாம்.

வெறுத்தது: இன்று காலை நடந்த பார்முலா 1 பந்தயம். Ferrari ரசிகனான எனக்கு, இன்றைய முடிவுகள் மிகுந்த ஏமாற்றம் அளித்தது (இரண்டாம் இடம் பெறுவார் சூமாக்கர் என நினைத்தால், ஐந்தாவது இடமே மிஞ்சியது).

ரசித்தது: ரகுமான் இசையமைத்த "அ-ஆ" படப்பாடல்கள். முக்கியமாக "அன்பே ஆருயிரே", "மயிலிரகே" மற்றும் "மரங்கொத்தியே" பாடல்கள் மிகவும் அருமை.

ருசித்தது: நண்பருடன் சமைத்து உண்ட "Aaluu" பரோட்டா.

July 13, 2005

அன்னியன் - கங்குலி சந்திப்பு

சமீபத்தில் படித்து ரசித்தது:

அம்பி: மிஸ்டர் கங்குலி, அம்பயர் அவுட்னுடாரோ இல்லியோ, அப்புறம் ஏன் சத்தம் போட்டுன்டு இருக்கேள்? இது சட்டப்படி தப்பாக்கும்.
கங்குலி: டேய் குடுமி! நா யாருனு தெரியுமா? பெங்கால் டைகர்(Bengal Tiger). அப்டி தான் கத்துவேன்.
அம்பி: கென்யா, பங்ளாதேஷ் கூட எல்லாம் சென்சுரி அடிக்கறேளே, ஆனா அஸ்த்திரேலியா, பாகிஸ்தான்-னா மட்டும் ஒன் பாத்ரூம் போறேளே, ஏன்?
கங்குலி: நான் தாதா-டா! தேவையானப்ப மட்டும் ஆடுவேன்.
அம்பி: கேப்டன் கங்குலி, மத்த டீம் கேப்டன்லாம் (பான்டிங், ஸ்மித், இன்ஸி) செஞ்சுரி அடிச்சு அவா டீமை ஜெயிக்க வைக்கரா, ஆனா நீங்க மட்டும் ஆடவே மாட்டேன்றேளே?
கங்குலி: டேய் குடுமி! அதான் சச்சின், சேவாக், டிராவிட் எல்லாம் செஞ்சுரி அடிக்கரானுங்கல்ல, அப்புறம் நான் எதுக்குடா அடிக்கனும்?
அம்பி: அலட்சியமா பேசாதேள் கங்குலி. அடுத்தவா டேலண்ட்ல புகழ் தேட்ரது தப்பு!
கங்குலி: போடா குடுமி! எனக்கே அட்வைஸ் பண்றியா? #$^%$##$%(அர்சனை தொடர்கிறது)...


அன்னியன்: டேய் பாடு (BAADU).
கங்குலி: யாருங்க நீங்க? கில்லஸ்பி மாதிரி ஹேர் ஸ்டைல் வச்சிருக்கீங்க??
அன்னியன்: நான் அவன் இல்லடா, எமன். ஏன்டா ரன் அடிக்கவே மாட்டேங்கிர?
கங்குலி: பேட்டிங் பார்ம் அப்பப்ப வந்துட்டு போகும். இதெல்லாம் கிரிக்கெட்ல சகஜம்ங்க.
அன்னியன்: இப்டி சொல்லி தப்பிச்சிகலாம்னு பாக்குரியா!!!!!!

அன்னியன்: 5 ரன் எடுத்தா தப்பா?
கங்குலி: ஒன்னும் தப்பு இல்லீங்க.
அன்னியன்: 5 மேட்ச்சுல 5 ரன் எடுத்தா தப்பா?
கங்குலி: தப்பு மாதிரி தாங்க தெரியுது.
அன்னியன்: 5 வருஷமா 55 மேட்ச்சுல 5 ரன் எடுத்தா தப்பா?
கங்குலி: பெரிய தப்பு தாங்க.
அன்னியன்: கம்மனாட்டி! அதத்தான்டா ஒவ்வொரு மட்ச்சுலயும் நீ பண்னிக்கிடு இருக்கே!
அன்னியன்: இது மாதிரி சொந்த லாபதுக்காக டீமை தோக்கடிக்கரவனுக்கு, நரகத்துல குடுக்கர தண்டனை 'பால்(Ball)பாகம்'.உன்னை ஸ்டெம்ப்பா நிக்க வச்சி, அக்தர், லீ, மெக்ராத் எல்லாரும் பவுலிங் ப்ராக்டீஸ் பன்னபோறாங்க!!!!!!!

நன்றி - ராம்பிரசாத்

June 28, 2005

MIT கருத்து கணிப்பு

கருத்து கணிப்பில் கலந்து கொண்டு உங்கள் குரலை பதிவு செய்யுங்கள் !

Take the MIT Weblog Survey

June 25, 2005

தலைவா, ஏதேனும் திட்டம் இருக்கா?

"சந்திரமுகியின் விமர்சனத்துடன் உங்களை சந்திக்கிறேன்" என்று கூறி விடை பெற்ற ஆள்தோட்ட பூபதி மின்பொறியியல் ஆராய்ச்சி கடலில் விழுந்து கல்வி அலைகளால் இவ்வளைதளத்திள் இருந்து வெகு தூரம் அடித்துச் செல்லப்பட்டான்.

தலைவர் பாட்சா படத்தில் சொன்னது போல், ஜப்பான் நாட்டவர் வேலை செய்யாவிட்டால் இறந்து போய்விடுவர், ஆங்கில நாட்டவர் தன்னை பெருமையாயை கருதாவிடில் இறந்து போய்விடுவர், தமிழர் பேசாவிடில் இறந்து போய்விடுவர். அது போல் என் போன்ற வெளிநாட்டு வாழ் தமிழர், தமிழ் படங்களை காணாவிடின் இறந்து போய்விடுவர்.

எனவே, இந்த ஆள்தோட்ட பூபதி, தனது வாழ்க்கையை தக்கவைத்துக் கொள்ள மீண்டும் அட்லாண்டா செல்கிறான், இந்தியாவை திருத்த முயளும் அன்னியனை காண.

சந்திரமுகியின் பல்வேறு விமர்சனங்களும், அப்படத்தின் வசூல் சாதனையுமே போதும், விமர்சனம் வேண்டாம் என நொண்டிச் சாக்கு சொல்கிறான் பூபதி.

விகடன் இதழில் தலைவரிடம் கெட்கபட்ட கேள்வியும், அதன் பதிலும் இதோ:

கேள்வி: ÔÔதன் படங்கள் மூலமா தமிழ்நாட்டுக்கு ரஜினி தந்தது ஏராளமான Ôசந்தோஷம்Õ. ரஜினிக்குத் தமிழ் மக்கள் திருப்பிக் கொடுத்தது அளவில்லாத அன்பு! யோசிச்சுப் பார்த்தால், இது உணர்வுரீதியான பந்தம். இதைத் தாண்டி உங்களை நேசிக்கிற தமிழ் மக்களின் நலனுக்கு ஆக்கப்பூர்வமா ஏதாவது செய்யணும்னு எப்போவாவது யோசிச்சது உண்டா? அப்படி ஏதாவது ஒரு திட்டம் இப்போ உங்க மனசில் இருக்கா?

பதில்:ஓரிரு விநாடிகள் தீர்க்கமான மௌனம் காக்கிற ரஜினி, நம் கண்கள் பார்த்து அழுத்தமாகச் சொல்கிறார்...
‘‘இருக்கு!”


பி.கு: கல்விப் பளுவின் காரணமாக பூபதி, பூ'பேதி' ஆகி திண்டாடுவதால் அவரது தமிழ் படுகொலை பணிகளுக்கு சிறிது நாட்கள் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. ஆகவே தமிழ் ஆர்வலர்கள் சற்றே இளைப்பாறிக்கொள்ளவும்.

June 19, 2005

காயம்

விழுந்தவுடன் எழுந்து ஓடலாம்
விளையாட்டாய் பட்ட காயமெனின், ஆனால்
இஃ தோ விழைந்து பட்ட காயமாயிற்றே !

June 09, 2005

Sachins decline???

I am little bit irked to find the papers writing "Sachin's decline". So I dug into the last five matches (test and ODI) he played. He scored a century and took 2 wickets in ODI and 2 half centuries and 1 wicket in test criket. By any standards this is acceptable performance. Inspite we should keep in mind that he played these with injuries.

The people who love supernatural things to happen (they expect sachin to be super/spider/bat man and smash out macgrath and co like the are evil forces) are the once who make these cry. My request to all of them is "Think reasonably before u put ur acidic comments".

Even now sachin is by far one of the best batsmen in Indian line-up and he is not depriving a talent sitting in the reserve bench from taking up the wicket.

May 25, 2005

My rythm


Now that I got hold of a point n shoot 2mp vivitar digicam, I hope I can sneak in few decent pics. And about the pic: I used to try my hand at this keyboard (my roomie's). After trying for these 6 months, I have realized that it will take me a very(read as Infinite) long time to get a grip of music. So, I shot this pic to portray where I am standing and what is ahead of me(in music). Posted by Hello

Ring 3


Ring 3? Posted by Hello

May 19, 2005

Next Gen Cricket

I was able to see some good changes proposed in cricket by the ICC committee. The impressive proposal among them are:
1) Tactical Substitution: The new teams will have 12 men (but only 11 can be on field at any time) providing the captain with an extra batsman/wicketkeeper/fielder/bowler according to the situation of the match. Say Ganguly (If he would be there??) can use Agarkar for the last 10 overs as he can dig in some toe crushers in the death overs or He can bring in murali karthik, to help anil and bajji, if the pitch gets slow and ball stops coming on to bat. Looks like cricket gets on par with other games like Soccer providing the tactical team composition decision with this rule.

2) The fielding team captain or the batsmen can appeal against the decision of the field umpire if the feel that the decision is not fair. This is a cool rule and can help in avoiding the sad ends to batsmen and wicket denied bowlers. Looks like Sachin will make the most out of Bug(c)knor with this rule.

These proposals are to be tested in Johnny Walker Super Series in Australia. The other rule that I was expecting was the yellow and red card like in soccer. That would provide a grip on Sledgers/racist players in the gentleman's games. Lets wait n see how far these rules add spice to the game.

April 14, 2005

சந்திர ஒளியில் CM

"ரஜினி-CM" என்று தலைப்புச் செய்தியை பர்த்தவுடன் இந்தியா சென்று ஓட்டு போட நேரம் வந்ததென்று நினைத்தபடி செய்தியை க்ளிக்கிய(சொடுக்கிய) பின் தான் தெரிந்தது CM என்றால் Chandira Muki(சந்திரமுகி) என்று.(அட தேவுடா)

இத்தனை நாள் இதற்காகத் தானே காத்திருந்தேன். கையோடு அடுத்த வேலையாக வலைதளத்திற்கு சென்று டிக்கெட்டை வங்கினேன்(ATLANTA-வில் ஆறு மணி ஆட்டம் காண).

இனி "தலைவரின் அடுத்த படம் பாட்சா போல வருமா?" என்று இல்லாமல், "சந்திரமுகி போல் வருமா?" என பெசப்படும் என வெண்டுகிறென்.

மும்பை எக்ஸ்பிரஸ் ATLANTA-வில் திரையிடவில்லை என்பது தான் ஒரே குறை. திரையிட்டிருந்தால், கையோடு அதையும் கண்டு களித்திருக்கலாம்.

தலைவர் CM ஆக வெற்றி பெற்றாலும் சரி, CM(சந்திரமுகி) ஆக வெற்றி பெற்றாலும் சரி, ஆதரவு அளித்து குதூகளிக்கும் தலைவரின் விசிரி...

பின் குறிப்பு: 2Days வெயிட் செய்யன்டி....... பட விமரிசனத்துடன் உங்களை சந்திக்கிறேன்.

April 13, 2005

தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

இதயம் முழுதும் நிறைந்த இனிய தமிழ்
இமயம் தாண்டி ஒளிர்ந்து/ஒலித்து
உலகெங்கும் மலர வேண்டி வாழ்த்துகிறேன்

இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

-திலீப்குமார் வெற்றிவேல்

March 24, 2005

Not another Ayodhya!!!


As it was in India, I still start my day with a cofee in front of Newspapers(News Web Sites). Just like any day I did that today too, and was shocked to see the following news. Hold on, its not the news of Inzamam and Younis forging a 300+ runs partnership, but it is the news released by Bharatiya Janata Party:

"Bharatiya Janata Party leader Vinay Katiyar on Wednesday claimed that the Taj Mahal in Agra was actually a Shiva temple built by Raja Jai Singh and was named 'Tejo Mai Mahal'. This fact finds mention in the book Badshahnama by Abdul Hamid Lahori, a close associate of Mughal emperor Shah Jahan," Katiyar said in Lucknow."

The moment I read it, the ugly communal violence following the Ayodhya Ram temple dispute engulfed me and sent shivers through my spine. I am wondering if India is still a secular country. Let the Gods be for enlighting humans, and not to turn them up against each other. Let there be just one Ayodhya in the Dark pages of Indian history.

March 19, 2005

Steve BUGner...


yeasterday's play (Ind-Pak 2nd test day3) was so great as Indians put up a brave fight and took command of the testmatch from the Pakis. But the Indian domination would have been complete but for the stunning game by one person. Surprisingly its neither an indian nor a pakistani but it was the umpire Steve BUGner. Sorry Mr. BUGner I am not going to call u 'buckner' anymore... The way u shamelessly ruled out Sachin is nothing but a disgrace to Elite Umpire panel. While u should be proud that u have officiated 100 test matches, why don't u think that U are 100 tests old and it is time to retire for the wellness of cricket. If u are not going to retire, then passionate cricket fans like me are gonna have u hurt retired....

But, keep in mind.... U cannot stop sachin from scoring record centuries.

For more info on what happnd with BUGner read this post by my friend.

பரட்டை! பேரை மாத்து!!!

சற்று முன் கிடைத்த/ படித்த செய்தி:
"திருமாவளவன் 'சந்திரமுகி' படத்தின் பெயரை மாற்றுமாறு கோரிக்கை"
அட என்னப்பா இது, சந்திரமுகி நல்ல அழகான தமிழ் பெயர் தானே என்று பார்த்தால் அது இந்தி பெயராம். (சந்திரன்= நிலா, முகி = முகம்).
இதை படித்த பின் யாரை குறை சொல்வது?

1) தமிழை வளர்க்கிறேன் பேர்வழி என்று கோமளித்தனம் செய்யும் கூட்டத்தையா?
2) அல்லது சந்திரமுகி பட பாடல் வெளியீட்டு விழாவில் இந்த விபரத்தை போட்டுடைத்த அப்படதின் பாடலாசிரியர் வாலியையா?

அந்த கடவுளுக்கே வெளிச்சம்...........ஆக மொத்தம் திரைப்பட உளகின் கூத்து தொடருது. இன்னும் கொஞ்ஞம் கிளர அடுத்த மாதம் கேப்டன் தனி கட்சி துவக்கப்போகிறார்........

March 02, 2005

Go Sania....Go..

Its was a pleasant surprise for me when I saw the news "Sania Mirza pulled off the biggest win of her fledgling career when she upset world number 7 and US Open champion Svetlana Kuznetsova in straight sets, 6-4, 6-2, to move into the quarter-finals of the Dubai Open women tennis championship on Tuesday".

It was a surprise to me coz, I didn't place high hopes on her due to following reasons:

1) Budding star, that means high hopes will lead to disappointment.
2) She was struggling with her bruised knee. And she was even thinking about withdrawing from the event.
3) tournament after recovery from injury is always going to be tough for a rising star, especially when its against top ranked player...


Worse was the fact that who had the most terrible start to the match; lost the first game to love in 42 seconds, as the fourth-seeded Russian fired two aces, and fell behind 0-4 after suffering an ankle injury.

Then comes the 'Courage show' by Sania when the Pain killer started to take effect; Once Sania had banished her nerves she began to thump the ball down the line. The Russian had no answer to Sania's growing confidence.

After winning six straight games to take the first set Sania grew in confidence and forced a forehand error from Kuznetsova to break in the first game of the second set and went on to claim the match 6-4, 6-2.

I wish that she beats 28th ranked Jelena Jankovic in the quarter finals, but without high expectations.

சட்டென மொட்டு விட்ட சிந்தனை

ஊருகிக் கரையும் வரை ஒளி தரும் மெழுகு போல்
கருகிக் கரையும் வரை உதவி செய்யும் நல்,
உள்ளந் தனை தர கேட்டேன்!

March 01, 2005

மத்திய பட்ஜெட்

ஜுனியர் விகடன் இதழில் இருந்து ஒரு பகுதி

"ஒரு பட்ஜெட் நல்ல பட்ஜெட்டா இல்லையா என்று தெரிந்துகொள்ள சுருக்கமான வழி என்ன தெரியுமா? பட்ஜெட் தினத்தன்று மும்பை பங்குசந்தைக் குறியீடான சென்செக்ஸைப் பாருங்கள். பட்ஜெட் வெளியாகிக் கொண்டிருக்கும்போதே பங்கு வர்த்தக குறியீடு எனப்படும் Ôசென்செக்ஸ்Õ தனது நர்த்தனத்தை துவங்கிவிடும். அவ்வளவு துரிதம்!
பட்ஜெட்டில் வழங்கப்படும் சலுகைகள் மற்றும் வரிகளுக்கு ஏற்றவாறு உடனுக்குடன் தனது ரியாக்ஷனை காட்டிவிடும் பங்குசந்தை! பல வருடங்கள் அனுபவம் பெற்றவர்களும் பொருளாதார வல்லுனர்களும் இத்துறையில் ஈடுபட்டிருப்பதால், நிதி அமைச்சர்கள் கூட, பட்ஜெட்டுக்குப் பின் சென்செக்ஸ் என்ன ஆனது என்றுதான் முதலில் கவனிப்பார்கள்.
சென்செக்ஸை, பட்ஜெட்டின் தாக்கத்தை எதிரொலிக்கும் ஒரு கண்ணாடி என்றால் மிகையல்ல. பட்ஜெட்டைப் பற்றி, நாடு முழுவதுமுள்ள முதலீட்டாளர்களின் ஒருமித்த கருத்தே சென்செக்ஸ. இந்த பட்ஜெட் சமர்ப்பிக்கப் படுவதற்கு முன் சென்செக்ஸ் 6569.72 என்ற அளவில் இருந்தது. பட்ஜெட்டின் முடிவில் 6713.86 புள்ளிகள் என்று, மீண்டுமொரு புதிய உச்சத்தை தொட்டது. ஒரே நாளில் 144.14 புள்ளிகள் ஏறி, மொத்த பங்கு மார்க்கெட்டும் ப.சிதம்பரத்தின் பட்ஜெட்டை பாசத்துடன் வரவேற்றது. இத்தனைக்கும், பங்கு வர்த்தக வரியை (Securities Transaction Tax-STT) சிறிதளவு உயர்த்தியும் இருக்கிறார் ப.சி. கடந்த நான்காண்டுகளில் சென்சஸ் புள்ளிகள் இப்படி உயர்ந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது..."

February 25, 2005

நல்லதோர் வீணை

சிறு வயது நண்பரான சுப்பிரமணியின் "நல்லதோர் வீணை" என்ற கவிதையை எழுதி எனது வலைபதிவை துவக்குகிறேன்...

நல்லதோர் வீணை செய்தே -அதை
நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?
சொல்லடி, சிவசக்தி, -எனைச்
சுடர்மிகும் அறிவுடன் படைத்து விட்டாய்,
வல்லமை தாராயோ, -இந்த
மாநிலம் பயனுற வாழ்வதற்கோ?
சொல்லடி, சிவசக்தி! -நிலச்
சுமையென வாழ்ந்திடப் புரிகுவையோ?

விசையுறு பந்தினை போல் -உள்ளம்
வேண்டிய படிசெல்லும் உடல்கேட்டேன்,
நசையறு மனங்கேட்டேன் -நித்தம்
நவமெனச் சுடர்தரும் உயிர்கேட்டேன்,
தசையினை தீசுடினும் -சிவ
சக்தியை பாடும்நல் அகங்கேட்டேன்,
அசைவறு மதிகேட்டேன்; இவை
அருள்வதில் உனக்கேதுந் தடையுளதோ?

வணக்கம்

எங்கே வருவேன் எப்பிடி வருவேன்னு யாருக்கும் தெரியாது, ஆனாவரவேண்டிய நேரத்துல correct-அ வருவேன்...

February 13, 2005

To view tamil unicode fonts (Windows)

To view tamil Unicode fonts in windows XP system:

To enable tamil unicode font support in windows follow the instructions given below.


  1. Go to control panel -> Regional and Language options.
  2. Click on the languages tab
  3. Enable the option "Install files for East Asian Languages" (Refer to image below)


You will be asked to insert Windows installation disk. Do that and restart the system.

You should now be able to view tamil unicode fonts.

Note: for further tips on reading and writing in tamil unicode visit ezhilnila



February 12, 2005

For the sake of blogging...:(

I started out my first log like any other guy.....Hoping to scribble something often.........
Fortunately(for u)/ Unfortunately(for me) I have a bad memory something strikes my cerebellum, I think about writing it when I get back to nearest PC. But, before I grab the keyboard, I forget what I was intending to write and eventually end up writing something like this...........

Alright........ I guess I got what I was thinking....
Is it about the Narain karthikeyan........Or Is it about the Valentines day special food at Ahabite?????

oops! I let it off my mind as I typed the above words.....

Sorry for making u read the above and wasting ur precious(??) SURF time.
I assure u, the next time, I'll pen them down like Guy Pearce in Memento and get my cerebral sparks to u, real hot like Indian Samosa!!!

February 06, 2005

Destiny or jus' floating around?

Few things in few movies make me think for a little long while. Adding to the list is the following dialogue from Tom Hanks, in the movie "Forrest Gump".

"I don’t know if we each have a destiny, or if we’re all just floatin’ around, accidental-like, on a breeze. . .
But I think, maybe it’s both . . . Maybe it’s both happening at the same time "

I get surprised when I see/hear something, which has been running through my mind without concrete words expressed in a lucid way, just like the one above.

I am feeling gifted to watch the movie so late coz, had it been earlier; I would have dumped it as another boring one. Now that I get to watch some movies, more precisely, I get to notice the dialogues of these kind of movies, I am feeling like my mute inner philosophical world has begun to spit out words like a young child starting to speak.

The other day, a dialogue from Achilles boomed through my cranium and whipered something into my Frontal Lobe which inturn rang up a siren in my mute philosophical world. And let me get that in the next blog.

PS: Sorry for sounding dumb...

February 03, 2005

Christmas Eve in Chicago


To start of, this is a snap taken from the shoreline of Lake Michigan looking into Chicago downtown. Posted by Hello