February 12, 2006

ரங் தே பசந்தியும் Jésus de Montréal-உம் - சில உண்மைகள்


ரங் தே பசந்தி(RDB) படத்தை சென்ற வாரம் அருகில் உள்ள ரேவ்(rave) திரையரங்கில் சென்று கண்டேன். நான்கு, ஐந்து, மற்றும் ஆறாம் வகுப்பில் சந்தர்ப்ப சூழ்நிலையால் சென்னையில் ஹிந்தி பாடத்தை மூன்றாம் மொழியாக எடுத்து விழி பிதுங்கியதாலும் (மூன்று வருடமும் அருகில் அமர்ந்த தீபா என்ற தேவதை எழுதுவதை அப்படியே எனது விடைத்தாளில் வரைத்து பாஸானது வேறு கதை), ஏம்.டீவி(Mtv) கிளிகிளுப்பை (சத்தியமா இசையைத்தாம்பா சொல்றேன்) கண்டு பெற்ற ஹிந்தி ஞானத்தை வைத்து கொண்டு ஒப்பேற்றி படத்தை புரிந்து கொள்ளலாம் என சென்றேன்.



அரைகுறை ஹிந்தியில் நானே தனி கதையை நினைக்க வழியில்லாமல் subtitle-ஐ போட்டுவிட்டார்கள். பாலக்கரை பாலன் அவரது பதிவில் இப்படத்தை ஏற்கனவே அக்கு வேறாய் ஆணி வேறாய் ஆராய்ந்து விட்டதால் நேராக அடுத்த விஷயத்திற்கு போகிறேன்.

படத்தைப் பார்த்து விட்டு வீட்டிற்கு வந்ததும் வழக்கம் போல நண்பருடன் அமர்ந்து படத்தின் முடிவு சரியா என அலசினோம். படத்தைப் பற்றி புகழ்ந்து கொண்டிருக்கையில் நண்பர் கூறினார் "ரக்கேஷ் ஒம்பிரகாஷ் மெஹரா (டைரக்டர்) இந்த படத்திற்காக ஏழு வருடமாக ஆராய்ச்சி செய்ததாக rediff-ல் வெளியாகியுள்ளது".

உடனே rediff சென்று பார்த்ததில் டைரக்டரின் பேட்டியில் ஒரு பகுதி என்னை வியப்பில் ஆழ்த்தியது.

கேள்வி: How long did it take to complete Rang De Basanthi
டைரக்டரின் பதில்: 7 years of research-4years of writing-16 months in pre-production-4 months of shooting and 7 months of post production


இதற்கு ஏன் வியப்படைய வேண்டும் என நினைப்பவர்கள் Jésus de Montréal என்ற பிரென்சு மொழி படத்தை பார்த்திருந்தால் காரணத்தை அறிந்திருப்பீர்கள். படத்தின் கரு IMDB-இன் வரிகளில்:
"A group of actors putting on an interpretive Passion Play in Montreal begin to experience a meshing of their characters and their private lives as the production takes form against the growing opposition of the Catholic church."


Jésus de Montréal படத்தை நான் காணவில்லை என்றாலும் கதை சுருக்கட்டிலிருந்தே தெரிகின்றது இது ஒரு அப்பட்டமான தழுவல் என்று. copy இல்லை inspiration என்று கூறினால், பிறகு ஏன் பேட்டியில் தனது சொந்த கற்பனை போல் சித்தரிக்க வேண்டும்? சமீபத்தில் வெளிவந்த படங்களில் RDB-ஐ மிகச்சிறந்த படம் என்று கருதும் எனக்கு இது கொஞ்சம் ஏமாற்றத்தையே தருகிறது. கூடிய விரைவில் Jésus de Montréal படத்தை பார்த்துவிட்டு முழூ ஒப்பீடு செய்து ஒரு பதிவு போடலாம் என்றிருக்கிறேன்.

Categories:

February 07, 2006

சூப்பர்பவுள்(superbowl) விளம்பரங்கள்

ஒரு வழியா சூப்பர்பவுள் விளையாட்டு நடந்து முடிந்தது. 2004-ல் நடந்தது போல் (ஜேனட் ஜாக்சன்) இந்த முறை சுவாரஸ்யமாக எதுவும் நடக்கவில்லை என்றாலும், இம்முறை ஆட்டத்திற்கு நடுவில் போடப்படும் விளம்பரங்கள் படு பிரமாதமாக இருந்தன. அனைத்து விளம்பரங்களையும் காண இங்கு செல்லவும். எனக்கு பிடித்த சில விளம்பரங்களை இங்கே போட்டுள்ளேன். 'Godaddy'(1 & 2) விளம்பரமும் படு(மலை மலை) அசத்தல். கண்டு மகிழவும். "நாயா வேஷம் போட்டா குறைச்சு தான் ஆகணும்" என்பது போல், இந்த ஊருலே இரெண்டரை வருஷமா இருக்கறதாலே இப்பதான் மெதுவா இந்த ஊரு விளையாட்டுகளை பாக்க ஆரம்பிச்சிருக்கேன். எனவே இதன் மூலம் வலைபதிவர்களுக்கு தெரிவிப்பது என்னவேன்றால், இனி வரும் பதிவுகளில் அமெரிக்க விளையாட்டுக்களான football, basketball போன்றவற்றின் பதிவுகள் அங்கங்கே உளறி வைக்கப்படும், டும் டும் டும்...

பி.கு.: பிளேயரின் நடுவில் தெரியும் play பட்டனை தட்டவும்.

Magic Fridge


Streaker


Turbulance


Fedex


Stunt City


Categories: ,

February 01, 2006

ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்

base image from http://www.markstivers.com

வரப்போற சட்டமன்ற தேர்தலுக்கு இப்பவே கருத்து கணிப்புகள் சூடு சேர்க்க ஆரம்பிச்சுடாங்க. நம்ம வலைபதிவு மக்களும் காரசாரமா போட்டு தாக்கிட்டு இருக்காங்க. "அடடா! நாம இங்க(அமெரிக்கா) உக்கந்துக்கிட்டு என்னத்த பண்ண" அப்பிடீனு நானும் என்னோட மனசாட்சிகளும் பேசிக்கிட்டு இருந்தோம்

நான்: அரசியலுக்கும் நமக்கும் என்னா சம்மந்தம்?

ம1(மனசாட்சி1): அப்படிலாம் சொல்லக் கூடாது. கலாம் அங்கிளே "இளைஞர்கள் நாட்டின் தூண்கள்"-னு சொல்றாரு. பொருப்பா நடந்துகற வழிய பாரு.

நான்: யேய் யாருப்பா அது?

ம1: நாந்தேன், உன்னோட மனசாட்சி.

நான்: அண்ணா வணக்கண்ணா! இப்ப என்ன பண்ணசொல்றீங்க?

ம1: அதாவது, ...
அதற்குள் இடைமறித்து,

ம2(மனசாட்சி2): அது பேச்ச கேக்காதே, நான் சொல்றத கேளு!

நான்: அட! இது யாருப்பா?

ம2: நானும் உன்னோட மனசாட்சிதேன்.

ம1: ஆஹா வந்துட்டான்யா வந்துட்டான்.

நான்: நான் இங்கருந்துகிட்டு என்னாத்த பண்ண முடியும்?

ம1: தபால்ல ஓட்டு போடலாம். ஒவ்வொரு இ.குடிமகனும் கட்டாயம் ஓட்டு போடனும்-னு கலாம் அங்கிளே சொல்லியிருக்கார்.

நான்: எனக்குத்தான் வாக்காளர் அட்டையே இல்லியே, நான் எப்பிடி ஓட்டு போட முடியும்?

ம2: அரசியல் ஒரு சாக்கடை. விடுபுட்டு ஜோலிய பாக்க போ!

ம1: 24 வயசாயிருக்கு. 6 வருஷமா அட்டைய வாங்காம என்னாத்த புடுங்கீட்டு இருந்த?

நான்: ஒவ்வொரு தடவையும் நானும் பேரை குடுப்பேன். போட்டோ எடுக்க பொறப்ப எம்பேரு லிஸ்டுல இல்லைனு சொல்றாங்க. நான் என்னா பண்றது?

ம2: அப்பவே சொன்னேன் அரசியல் ஒரு சாக்கடைனு!!!

நான்: அப்புறம் அமெரிக்கா வந்துட்டேன். இனிமே எதாவது பண்ண முடியுமா?

ம1 & ம2: அட முட்டாப் பயலே உன் வோட்ட வேற எவனோ போட்டுகிட்டு இருக்கான். நீ இங்க உக்காந்து தலைய சொறியுற. இதுக்கு மேல ஒரு மண்ணும் பண்ண முடியாது. முடிஞ்சா புஷ்ஷுக்கு கள்ளவோட்டு போட பாரு.

நான்: ஹலோ! நில்லுங்கப்பா. எனக்கு ஒரு பதில் சொல்லிட்டு போங்க. அதுக்குள்ள ஓடுனா எப்பிடி?


"ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலையில்லை" என பின்னிசை கேட்கிறது....

வலைபதிவு மக்களே, என் போன்ற மக்கள் ஜனநாயக உரிமையை நிலைநாட்ட வாய்ப்பு இருக்கா? உங்களுக்கு எதாவது யோசனை இருந்தா சொல்லுங்கப்பா.

Categories: