July 25, 2005

சின்ன சின்ன மழைத்துளிகள்

அலபாமா வெய்யில் தாளாமல் மழைக்கு ஏங்கிய போது வைரமுத்துவின் வைர வரிகள் மழைவென பொழிய கற்பனையில் குளிர்ந்தேன்.

இடம்: அலபாமா
படம்: என்சுவாசக்காற்றே
பாடல்: சின்ன சின்ன மழைத்துளிகள்
இசை: ரகுமான்
பாடலாசிரியர்: வைரமுத்து

க்ளங்க்ளங் க்ளங்க்ளங்
ஒரு துளி விழுது ஒரு துளி விழுது
க்ளங்க்ளங் க்ளங்க்ளங்
ஒரு துளி விழுது ஒரு துளி விழுது
ஒரு துளி இரு துளி
சில துளி பல துளி
படபட தடதட சடசடவென சிதருது


சின்ன சின்ன மழைத்துளிகள் சேர்த்து வைப்பேனோ
மின்னல் ஒளியில் நூலெடுத்து கோர்த்து வைப்பேனோ
சின்ன சின்ன மழைத்துளிகள் சேர்த்து வைப்பேனோ
மின்னல் ஒளியில் நூலெடுத்து கோர்த்து வைப்பேனோ
சக்கரவாகமோ மழையை அருந்துமாம் - நான்
சக்கரவாகப் பறவையாவேனோ!
மழையின் தாரைகள் வைர விழுதுகள்
விழுது பிடித்து விண்ணில் சேர்வேனோ

(சின்ன சின்ன)

சிறு பூவினிலே விழுந்தால் ஒரு தேன்துளியாய் வருவாய்
சிறு சிப்பியிலே விழுந்தால் ஒரு முத்தெனெவே முதிர்வாய்
பயிர் வேரினிலே விழுந்தால் நவதானியமாய் விளைவாய்
என் கண்விழிக்குள் விழுந்ததனால் கவிதையாக மலர்ந்தாய்
அந்த இயற்கையன்னை படைத்த ஒரு பெரிய ஷவரிது
அட இந்த வயது கழிந்தால் பிறகெங்கு நனைவது
இவள் கன்னியென்பதை இந்த மழை கண்டறிந்து சொல்லியது

(சக்கரவாகமோ)

மழை கவிதை கொண்டு வருது யாரும் கதவடைக்க வேண்டாம்
ஒரு கருப்பு கொடி காட்டி யாரும் குடை பிடிக்க வேண்டாம்
இது தேவதையின் பரிசு யாரும் திரும்பிக் கொள்ள வேண்டாம்
நெடுஞ்சாலையிலே நனைய ஒருவர் சம்மதமும் வேண்டாம்
அந்த மேகம் சுரந்த பாலில் ஏன் நனைய மறுக்கிறாய்
நீ வாழவந்த வாழ்வில் ஒரு பகுதி இழக்கிறாய்
நீ கண்கள் மூடி கரையும்போது மண்ணில் எய்துவாய்

(சக்கரவாகமோ)

(சின்ன சின்ன)

No comments: