February 25, 2005

நல்லதோர் வீணை

சிறு வயது நண்பரான சுப்பிரமணியின் "நல்லதோர் வீணை" என்ற கவிதையை எழுதி எனது வலைபதிவை துவக்குகிறேன்...

நல்லதோர் வீணை செய்தே -அதை
நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?
சொல்லடி, சிவசக்தி, -எனைச்
சுடர்மிகும் அறிவுடன் படைத்து விட்டாய்,
வல்லமை தாராயோ, -இந்த
மாநிலம் பயனுற வாழ்வதற்கோ?
சொல்லடி, சிவசக்தி! -நிலச்
சுமையென வாழ்ந்திடப் புரிகுவையோ?

விசையுறு பந்தினை போல் -உள்ளம்
வேண்டிய படிசெல்லும் உடல்கேட்டேன்,
நசையறு மனங்கேட்டேன் -நித்தம்
நவமெனச் சுடர்தரும் உயிர்கேட்டேன்,
தசையினை தீசுடினும் -சிவ
சக்தியை பாடும்நல் அகங்கேட்டேன்,
அசைவறு மதிகேட்டேன்; இவை
அருள்வதில் உனக்கேதுந் தடையுளதோ?

1 comment:

balai said...

ayya bharathiyar ungal siru vayadhu nanbaraa? bale bale....:) ..... eppadi ingu tamilil en karuthai viduvadhu endru theriyamal, tamizhai...angilapaduthiyirukiren. mannitharuzhga.